ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பொதுவாக மம்முட்டி தான் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படங்களுக்கு இடையில் சில வருட இடைவெளி விடுவது வழக்கம். ஆனால் கடந்த வருடம் தான், அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கசபா' படம் வெளியான நிலையில், தற்போது உடனடியாக இன்னொரு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். 'கசபா' படம் அவருக்கு 'கசப்பான' அனுபவங்களை தந்துவிட்டது தான் இந்த முடிவுக்கு காரணம்.. ஆம்.. அந்தப்படத்தில் அவர் வில்லன் இல்லை என்று சொல்லாலமே தவிர, கிட்டத்தட்ட கெட்ட குணங்களுடைய ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதேசமயம் அராஜகமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்..
படம் வெளியான பின்னர் கேரளாவில் மாதர்சங்க அமைப்புகள் மம்முட்டிக்கு எதிராக கொடி பிடித்து கோஷம் போடும் அளவுக்கு அந்த கேரக்டர் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தது. மம்முட்டியின் போலீஸ் கேரக்டர்களில் அவரது இன்ஸ்பெக்டர் பல்ராம்' கேரக்டர் ரொம்பவே பேமஸானது. அதனால் மீண்டும் மக்களிடம் தனது போலீஸ் கேரக்டர் குறித்த பாசிடிவான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார் மம்முட்டி.
இந்த நேரத்தில் தான் அவரை அணுகி புதிய போலீஸ் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷாம்தத். ஆம்.. 100 நாட்கள் ஓடிய சூப்பர்ஹிட் படமான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்து இப்போது இயக்குனராக மாறியிருக்கும் அதே ஷாம் தத் தான். இந்தப்படத்தில் மம்முட்டிக்கு ஸ்டைலிஷான இன்வெஸ்டிகேஷன் போலீஸ் அதிகாரி வேடமாம். அதிரடியான க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்.