பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் பிரம்மாண்டத் தயாரிப்பான '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் துபாயில் நடைபெறும் என சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. துபாயில் புகழ் பெற்ற பிரம்மாண்டமான கட்டடமான புர்ஜ் கலிபா முன்பு உள்ள புர்ஜ் பார்க்-கில் தான் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிகழ்ச்சியில் படக் குழுவினர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளார்களாம். ஏ.ஆர்.ரகுமானின் நேரடி இசை நிகழ்ச்சியும் அதில் நடைபெற உள்ளது. அக்டோபர் 27ம் தேதி இந்த விழா நடைபெறலாம் என்கிறார்கள். இதுவரை எந்த இந்தியப் படத்தின் இசை வெளியீடும் நடக்காத அளவிற்கு இதை மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் '2.0' படத்தின் டீசர் வெளியீடு நவம்பர் மாதம் ஐதராபாத்திலும், டிரைலர் வெளியீடு டிசம்பர் மாதம் சென்னையிலும் நடைபெற உள்ளது. ஜனவரி மாதம் படம் வெளியாக உள்ளது.