பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமானவர் சுபிக்ஷா. அதன்பிறகு பல மலையாள படங்களில் நடித்து வந்த அவர், விஜய் மில்டன் இயக்கிய கடுகு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். இப்போது நேத்ரா, சீமத்தண்ணி, கோலிசோடா-2, வேட்டை நாய் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி சுபிக்ஷா கூறுகையில், நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடித்திருக்கிறேன். ஆக்சன் திரில்லர் படம். அதையடுத்து வேட்டை நாயில் ஆர்.கே.சுரேசுக்கு ஜோடியாக அவரது மனைவி வேடத்தில் நடிக்கிறேன். ரொம்ப அழுத்தமான கதாபாத்திரம். சீமத் தண்ணி இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
அடுத்து, கோலிசோடா-2 படத்தில் ஒரு நல்ல வேடத்தில் நடிக்கிறேன். கடுகு படத்தில் நான் சிறப்பாக நடித்ததாக சொன்ன விஜய் மில்டன், கோலிசோடா-2 தொடங்கியதும் இந்த படத்தில் எனக்கு ஒரு கல்லூரி பெண் வேடம் இருப்பதாக சொன்னார். அதையடுத்து அவரிடம் நான் கதைகூட கேட்கவில்லை. உடனே கால்சீட் கொடுத்து விட்டேன்.
காரணம், கடுகு படத்தில் நான் நடித்த வேடம் நல்ல ரீச் கொடுத்தது. அனைவருமே என்னை கடுகு சுபிக்ஷா என்றுதான் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு எனக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தவர் விஜய் மில்டன். அதேபோல் கோலிசோடா-2விலும் பேசப்படும் வேடம்தான். இந்த படத்தில் கடுகு படத்தில் நடித்த பரத் சீனிக்கு ஜோடியாக நடிக்கிறேன். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரும்போது தமிழ் சினிமாவில் நானும் பேசப்படும் நடிகையாகி விடுவேன் என்கிறார் சுபிக்ஷா.