ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வின் காரணமாக நல்ல மதிப்பெண் எடுத்தும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு திரைத்துறையினர் அனுதாபத்தையும், அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ், அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இதற்கான காசோலையை ராகவா லாரன்சின் உதவியாளர்கள், அனிதாவின் வீட்டுக்குச் சென்று கொடுத்து வந்துள்ளனர். இதனை ராகவா லாரன்ஸ் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்று ராகவே லாரன்ஸ் கூறியுள்ளதாக தெரிகிறது. அரசு கொடுத்த நிதியை அனிதா குடும்பத்தினர் ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.