பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்த அரியலூர் மாணவி அனிதா, கடந்தவாரம் தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி அனிதாவிற்கு ஆதரவாக அவர் எழுப்பிய நீட் தேர்வுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன. பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாணவி அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இயக்குநர்கள் சங்கம் சார்பில், அனிதா உரிமை ஏந்தல் என்ற நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள ஆர்கே ஸ்டுடியோவில் நடந்தது. இதில் இயக்குநர்கள் ரஞ்சித் மற்றும் அமீர் இடையே மேடையில் ஏற்பட்ட கருத்து மோதல் சலசலப்பு ஏற்படுத்தியது. அதன் விபரம் வருமாறு...
முதலில் பேசிய இயக்குநர் ரஞ்சித்... ஒரு தமிழனாக இருந்து சொல்கிறேன், ஜாதியை ஒழிக்காத வரை தமிழ் தேசியம் என்பது எட்டாக்கனி தான். இப்படி நாம் பிரிந்து இருக்கும் வரை தமிழ் தேசியத்தை நோக்கி ஒரு அடி கூட நாம் எடுத்து வைக்க முடியாது என்றார்.
இதையடுத்து பேச வந்த வந்த இயக்குநர் அமீர்.... ஜாதி, மதங்களை கடந்து நாம் தமிழனாக இருக்கிறோம். அனைவரும் ஒன்றாக இணைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்த கருத்தில் முரண்பட்ட ரஞ்சித் உடனே மேடை ஏறி.... இன்னும் எத்தனை நாளுக்கு தான் தமிழ், தமிழன் என்று சொல்லி ஏமாற்ற போகிறீர்கள். தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கிறது. தமிழன் ஜாதியால் பிரிந்து கிடக்கிறான் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். ஜாதியற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதே என் விருப்பம் என மிகவும் ஆவேசமாக பேசினார்.
இதையடுத்து இயக்குநர்கள் ராம் உள்ளிட்டவர்கள் வந்து ரஞ்சித்தை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.