ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரே நாளில் அதிகப் படங்கள் வெளியாவதைத் தடுத்தால் திரையுலகத்திற்கும் நன்றாக இருக்கும். அதிலும் சிறிய நடிகர்களின் படங்களுக்குள் போட்டி வந்தால் தியேட்டர்கள் கிடைப்பதில் கூட சிக்கல் வரும். ஒரு படம் நன்றாக ஓட ஆரம்பித்த உடனே அந்தப் படங்களை தியேட்டர்களை விட்டுத் தூக்கும் வழக்கம் இருந்து கொண்டுதானிருக்கிறது.
கடந்த வாரம் வெளிவந்த 'குரங்கு பொம்மை' படம் நல்ல வரவேற்பு பெற்று இப்போதுதான் பிக்-அப் ஆக ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் இன்று வெளியாகும் ஏழு படங்களால் அந்தப் படத்தை தியேட்டரை விட்டு எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.
இன்று மட்டும் ”ஆறாம் வேற்றுமை, காதல் கசக்குதய்யா, கதாநாயகன், மாய மோகினி, நெருப்புடா, ஒன் ஹார்ட், தப்பு தண்டா” ஆகிய ஏழு படங்கள் வெளியாகின்றன. இவற்றில் 'கதாநாயகன், நெருப்புடா' ஆகிய இரண்டு படங்களின் நாயகர்களைப் பற்றித்தான் ரசிகர்களுக்கு அதிகம் தெரியும்.
'கதாநாயகன்' படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், 'நெருப்புடா' நாயகன் விக்ரம் பிரபு இருவருக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. விஷ்ணு விஷாலுக்காவது இதற்கு முன் வெளிவந்த படங்கள் நம்பிக்கையான படங்களாக அமைந்தன. ஆனால், விக்ரம் பிரபுவுக்கு முந்தைய படங்களும் மோசமான படங்கள்தான். இருவருமே வளர்ந்து வரும் நடிகர்கள்தான். இருந்தாலும் விக்ரம் பிரபுவை விட விஷ்ணு விஷால் ஒரு படம் அதிகமாக நடித்திருக்கிறார்.
இருவருக்குமே இந்தப் படத்தின் வெற்றி முக்கியமானது, இந்தப் படங்கள்தான் அவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.