ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
தன்னுடைய வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் தன்னுடைய தந்தைதான் என்று அழுத்தமாக நம்புகிறவர் இயக்குநர் சுசீந்திரன். அவர் முதன்முதலில் இயக்கிய வெண்ணிலாகபடி குழு படத்தின் கதை, அவருடைய தந்தையின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்புதான்.
தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் விழாக்களிலும் தன்னுடைய தந்தையை மேடையேற்றி அழகுபார்ப்பதை வழக்கமாகவே வைத்திருக்கிறார் சுசீந்திரன். அவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கிற படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. 'மாநகரம்' புகழ் சந்தீப் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டபோது தன்னுடைய தந்தையைக் கொண்டே புதிய பெயரை அறிவித்தார் சுசீந்திரன்.
தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இந்த படத்துடன் சுசீந்திரன் மற்றுமொரு படத்தையும் இயக்கி வந்தார்! இந்த படத்தின் வேலைகளும் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. சுசீந்திரன் இயக்கிய 'ஆதலால் காதல் செய்வீர்' படம் போல இந்த படத்திலும் முக்கிய பாத்திரங்களில் புதுமுகங்களே நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதையைக் கொண்ட இந்த படத்திற்கு ஒரு பெண்ணின் பெயரை சூட்டப்போவதாக சுசீந்திரன் அறிவித்திருந்தார். அவர் அறிவித்திருந்தபடி இப்போது படத்திற்கு 'ஏஞ்சலினா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'ஏஞ்சலினா' டைட்டில் போஸ்டரை சுசீந்திரனின் தாய், தந்தை இணைந்து வெளியிட்டுள்ளனர்.