விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நடிகர் சஞ்சய் தத், பூமி படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படம் அப்பா-மகள் இடையேயான பாசப்போராட்ட கதையில் உருவாகி இருக்கிறது. சஞ்சய் மகளாக அதிதி ராவ் நடித்திருக்கிறார். இப்படம் இம்மாதம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். அப்படி அவர் ஒரு புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முதன்முதலில் தான் சிகரெட் பிடித்து தந்தையிடம் மாட்டிக்கொண்ட விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறுகையில், நான் கழிப்பறையில் சிகரெட் பிடிப்பதை என் தந்தை கண்டுபிடித்துவிட்டார். பின்னர் என்னை தனியாக ரூமிற்குள் அழைத்து கொண்டு போய் அடி பிண்ணிவிட்டார். சிகரெட் பிடிக்க கூடாது என்று அப்போது தோன்றியது. ஆனாலும் அதை மீண்டும் புகைக்க துவங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
பூமி படம் வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸாக உள்ளது.