பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் படு தோல்வியடைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ராவணன், கடல்' ஆகிய படங்களை விடவும் மோசனமான தோல்வியைத் தழுவியது அந்தப் படம். இருந்தாலும் அந்தத் தோல்வியையும் தட்டிவிட்டு அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார் மணிரத்னம்.
அவருடைய அடுத்த படத்தில் ஜோதிகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். படத்தில் நாயகர்களாக நடிக்க விஜய் சேதுபதி, நானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருவரது கைவசமும் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் அவர்களது தேதி கிடைப்பது சிரமமாக உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சேதுபதி, நானி இருவருமே அவர்களுக்காகக் கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேடி வரும் கதைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இருப்பார்களா என்பதை அலசிப் பார்த்து நடித்து வருகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கும் தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது. மணிரத்னம் படமாச்சே என்று நடிப்பார்களா அல்லது அவர்களுக்குப் பொருத்தமான கதையாக இருந்தால் மட்டும் நடிப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.