வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளியிடை' படம் படு தோல்வியடைந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'ராவணன், கடல்' ஆகிய படங்களை விடவும் மோசனமான தோல்வியைத் தழுவியது அந்தப் படம். இருந்தாலும் அந்தத் தோல்வியையும் தட்டிவிட்டு அடுத்த படத்திற்குத் தயாராகி வருகிறார் மணிரத்னம்.
அவருடைய அடுத்த படத்தில் ஜோதிகாவும், ஐஸ்வர்யா ராஜேஷும் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். படத்தில் நாயகர்களாக நடிக்க விஜய் சேதுபதி, நானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருவரது கைவசமும் அடுத்தடுத்து படங்கள் இருப்பதால் அவர்களது தேதி கிடைப்பது சிரமமாக உள்ளதாகத் தெரிகிறது.
விஜய் சேதுபதி, நானி இருவருமே அவர்களுக்காகக் கதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களைத் தேடி வரும் கதைகளுக்கு அவர்கள் பொருத்தமாக இருப்பார்களா என்பதை அலசிப் பார்த்து நடித்து வருகிறார்கள். அதனால்தான் அவர்களுக்கும் தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது. மணிரத்னம் படமாச்சே என்று நடிப்பார்களா அல்லது அவர்களுக்குப் பொருத்தமான கதையாக இருந்தால் மட்டும் நடிப்பார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.