பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பைரவா படத்திற்கு பிறகு சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தமிழை விட தெலுங்கில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். நானியுடன் அவர் நடித்த நேனு லோக்கல் படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்ததால், தெலுங்கில் பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கும் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி கதையில் உருவாகும் மகாநதி படத்தில் லீடு ரோலில் நடித்து முடித்து விட்டார்.
அதையடுத்து, தற்போது திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் பெயரிடப்படாத அவரது 25-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்து பாங்காங்கில் நடைபெறுகிறது. அங்கு ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். இந்த பாடலை ஏற்கனவே இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சில தினங்களிலேயே அந்த பாடலை ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளார்களாம்.
மேலும், இதே படத்தில் இடம்பெற்றுள்ள இன்னும் சில பாடல்களுக்காக வேறு சில வெளிநாடுகளுக்கும் பவன்கல்யாண் டீமுடன் செல்கிறாராம் கீர்த்தி சுரேஷ். அதோடு, இந்த படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.