பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
போலீஸ் அதிகாரியின் மகனான, விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமாகி, மாவீரன் கிட்டு, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை போன்ற நல்ல படங்களை தந்திருக்கிறார். கடுமையான உழைப்பாளியான, அவரது நடிப்பில், கதாநாயகன் படம், இன்று வெளியாகிறது. வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் அவருடன் ஒரு சந்திப்பு:
கதாநாயகன் படம் பற்றி சொல்லுங்க...
இது ஒரு ஜாலியான படம். இந்த படத்தில், நான் காதலிக்கும் பெண்ணோட அப்பா, தனக்கு வரப்போகும் மருமகன், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்க வேண்டும் என ஆசைப்படுவார். அநியாயத்தை தட்டிக் கேட்கும் தைரியமான ஆண் மகனாக இருக்கு வேண்டும் என நினைப்பார். ஆனால், இந்த படத்தின் ஹீரோ, வம்பு சண்டைக்கு போகாத, அமைதியான பையன். இந்த அமைதியான இளைஞன், எப்படி கதாநாயகனாக மாறுகிறான் என்பது தான், படத்தின் கதை.
வெண்ணிலா கபடி குழு துவங்கி, கதாநாயகன் வரை உங்க பயணம் எப்படி?
இது, ஒரு நல்ல அனுபவம். நிறைய விஷயங்களை கற்க முடிந்தது. இரண்டாவது படமே பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படிப்பட்ட படங்களில் நடித்தால், காணாமல் போய் விடுவேன் என்ற பயம் வந்தது. இதன்பின் தான், நீர்பறவை, முண்டாசுபட்டி, மாவீரன் கிட்டு போன்ற படங்களில் நடித்தேன். இதுவரை நடித்த படங்கள் எல்லாவற்றையும் மொக்கை படங்கள் என, கூற முடியாது; சில படங்கள் சரியாக போகவில்லை என்று சொல்லலாம்.
தயாரிப்பாளர் ஆன அனுபவம்?
எல்லாமே ஒரு கனவு மாதிரி இருக்கு. வாழ்க்கையில், பொறுமை ரொம்ப முக்கியம் என்பதை, வெற்றி, தோல்வியில் இருந்து தெரிந்து கொண்டேன். மற்ற தயாரிப்பாளர்கள், பணம் போட்டு, ரிஸ்க் எடுத்து, என்னை ஹீரோவாக்க தயங்குகின்றனர். அதனால், நானே தயாரிப்பாளர் ஆகி விட்டேன். முதல் படத்திலேயே, வெற்றி கிடைத்தது. ஆனால், படப்பிடிப்பில், ஒரு தயாரிப்பாளராக நடந்து கொள்ள மாட்டேன். நடிக்கும் போது, நான் வெறும் நடிகன் மட்டுமே.
உங்க தயாரிப்பில் வேறு ஹீரோக்களுக்கு வாய்ப்பு தருவீர்களா?
கண்டிப்பாக தருவேன். ஆனால் முதலில், நான் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும். அதற்காக, கடுமையாக உழைக்கிறேன். விக்ராந்தை வைத்து, ஒரு படம் தயாரிக்கும் ஐடியா உள்ளது. விரைவில், அது நடக்கும்.
நிறைய புது இயக்குனர்களோடு படம் பண்றீங்க... அது வசதியா இருக்கா?
புது இயக்குனர்களுடன் வேலை செய்வது, எனக்கு கொஞ்சம் வசதியாகவே இருக்கிறது. சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்திலும், புது இயக்குனர் தான்.
அப்பா போலீஸ் அதிகாரி என்பதால், உங்களையும், அந்த துறையில் சேர வேண்டும் என வற்புறுத்தினாரா?
என்னை, எப்படியாவது ஒரு பிரபலமான நபராக்க வேண்டும் என ஆசைப்பட்டார். கிரிக்கெட்டில் சாதிக்க நினைத்தேன். அப்பாவும், பெரியப்பாவும், என்னை நடிகனாக்கி பார்க்க ஆசைப்பட்டனர். ஆறு ஆண்டுகள் தொடர்ந்து போராடினேன். எங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நிறைய அவமானங்களை சந்தித்தேன். இந்த அவமானங்கள் தான், என்னை ஒரு பெரிய இடத்தில் நிறுத்தியுள்ளன. ஆனால், அப்பாவின் அதிகாரத்தை நான் தவறாக பயன்படுத்தியது இல்லை.
பிரபலமான ஹீரோயின்கள் உங்களுடன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறதே...
உண்மை தான்; அமலா பால், ராட்சசன் என்ற படத்தில் நடிக்கிறார். சிலுக்குவார்பட்டியில் ரெஜினா, பொன் ஒன்று கண்டேன் படத்தில் தமன்னா நடிக்கிறாங்க.
உங்க கனவு ?