கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
நடிகை கங்கணா ரனாவத், அடுத்தடுத்து வீசும் அணுகுண்டுகளால், ஒட்டுமொத்த பாலிவுட்டும் பரபரத்துக் கிடக்கிறது.
வழக்கமாக, சக நடிகர் ஹிருத்திக் ரோஷனைத் தான், அவர், போட்டு தாக்குவார். இந்த முறை, கங்கணாவிடம் சிக்கியது, மூத்த நடிகர் ஆதித்ய பஞ்சோலி. இவரைப் பற்றி, ஒரு பேட்டியில், கங்கணா கூறுகையில், 'ஆதித்ய பஞ்சோலியை, என் தந்தையை போல் நினைத்து, ஒரு உதவி கேட்டேன். ஆனால், அவர், கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைத்து இருப்பது போல் அடைத்து வைத்திருந்தார். எனக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தார்' என, எகிறி அடித்துள்ளார்.
இதைக்கேட்டு ஆடிப்போன, ஆதித்ய பஞ்சோலி, 'அந்த பெண்ணுக்கு கிறுக்கு பிடித்துவிட்டது. நல்ல மன நல டாக்டரிடம் காட்ட வேண்டும். அவர் மீது, கோர்ட்டில் வழக்கு தொடருவேன்' என, பதிலுக்கு பாய்ந்துள்ளார். கங்கணாவின் அதிரடி புகார்களால், கலகலத்துள்ள பாலிவுட் நடிகர்கள், 'அடுத்த அணுகுண்டை யார் மீது வீசுவாரோ...' என, பீதியுடன் உள்ளனர்.