இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை கங்கணா ரனாவத், அடுத்தடுத்து வீசும் அணுகுண்டுகளால், ஒட்டுமொத்த பாலிவுட்டும் பரபரத்துக் கிடக்கிறது.
வழக்கமாக, சக நடிகர் ஹிருத்திக் ரோஷனைத் தான், அவர், போட்டு தாக்குவார். இந்த முறை, கங்கணாவிடம் சிக்கியது, மூத்த நடிகர் ஆதித்ய பஞ்சோலி. இவரைப் பற்றி, ஒரு பேட்டியில், கங்கணா கூறுகையில், 'ஆதித்ய பஞ்சோலியை, என் தந்தையை போல் நினைத்து, ஒரு உதவி கேட்டேன். ஆனால், அவர், கிட்டத்தட்ட வீட்டுச் சிறையில் வைத்து இருப்பது போல் அடைத்து வைத்திருந்தார். எனக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தார்' என, எகிறி அடித்துள்ளார்.
இதைக்கேட்டு ஆடிப்போன, ஆதித்ய பஞ்சோலி, 'அந்த பெண்ணுக்கு கிறுக்கு பிடித்துவிட்டது. நல்ல மன நல டாக்டரிடம் காட்ட வேண்டும். அவர் மீது, கோர்ட்டில் வழக்கு தொடருவேன்' என, பதிலுக்கு பாய்ந்துள்ளார். கங்கணாவின் அதிரடி புகார்களால், கலகலத்துள்ள பாலிவுட் நடிகர்கள், 'அடுத்த அணுகுண்டை யார் மீது வீசுவாரோ...' என, பீதியுடன் உள்ளனர்.