கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென தனி பாதையை வகுத்தவர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகுமார். அவருடைய மூத்த மகன் சூர்யா, 1997ம் ஆண்டு வெளிவந்த 'நேருக்கு நேர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமகமானார்.
சினிமாவிற்கு அவர் வந்து இருபது ஆண்டுகளாகிவிட்டன. அன்றிலிருந்து இன்று வரை அவ்வப்போது கொஞ்சம் தடுமாறினாலும் தமிழ்த் திரையுலகில் சூர்யாவுக்கென 'தானா சேர்ந்த கூட்டம்' நிறையவே இருக்கிறது. சூர்யா 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு சூர்யா நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அதில், எனது 20 ஆண்டு சினிமா வாழ்க்கை என்பது சாதிக்காததை சாதிக்க வேண்டும் என்பது தான். உங்களின் கைத்தட்டல் உத்வேகத்தையும், பாராட்டுகள் எனது தரத்தை உயர்த்தவும் உதவின. நீங்கள் தவறு என்று சுட்டிக்காட்டிய விஷயங்கள் என்னை இன்னும் கற்க உதவின. ஆதரவு, சினிமாவையும் தாண்டி அகரம் அறக்கட்டளை அமைக்க வைக்க உதவியது. இவை எல்லாவற்றையும் விட உங்களது அன்பு எனது இன்ஜினை வேகமாக இயக்க முக்கிய காரணமாக அமைந்தது. என்னுடைய இந்த 20 ஆண்டு பயணத்தில் உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் நான் பல மைல்கள் கடந்து பயணிக்க வேண்டியிருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு சூர்யா கூறியுள்ளார்.