டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். கதாநாயகனாக நடித்து அதில் அவருக்கு வெற்றி கிடைக்காததினால் தற்போது வில்லன், குணசித்திர வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
'இறைவி' படம் தோல்வியடைந்தாலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகு இப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்திலும் பிரதான வில்லனாக நடித்துள்ளார். இன்னொரு பக்கம் 'மாயா' பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரவாக்காலம்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தெலுங்கில் பிஸி நடிகராகி உள்ளார். தெலுங்கில் உருவாகவிருக்கும் 'போகன்' ரீமேக்கில் நடிக்கவும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கிறார்.
தெலுங்கிலும் லக்ஷ்மணே இயக்கும் இந்தப்படத்தில் அர்விந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே தற்போது எஸ்.ஜே.சூர்யா அழைக்கப்பட்டுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.