இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். கதாநாயகனாக நடித்து அதில் அவருக்கு வெற்றி கிடைக்காததினால் தற்போது வில்லன், குணசித்திர வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
'இறைவி' படம் தோல்வியடைந்தாலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகு இப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்திலும் பிரதான வில்லனாக நடித்துள்ளார். இன்னொரு பக்கம் 'மாயா' பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரவாக்காலம்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தெலுங்கில் பிஸி நடிகராகி உள்ளார். தெலுங்கில் உருவாகவிருக்கும் 'போகன்' ரீமேக்கில் நடிக்கவும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கிறார்.
தெலுங்கிலும் லக்ஷ்மணே இயக்கும் இந்தப்படத்தில் அர்விந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே தற்போது எஸ்.ஜே.சூர்யா அழைக்கப்பட்டுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.