ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
இயக்குநராக இருந்த எஸ்.ஜே.சூர்யா இப்போது படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். கதாநாயகனாக நடித்து அதில் அவருக்கு வெற்றி கிடைக்காததினால் தற்போது வில்லன், குணசித்திர வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.
'இறைவி' படம் தோல்வியடைந்தாலும் எஸ்.ஜே.சூர்யா நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகு இப்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படத்திலும் பிரதான வில்லனாக நடித்துள்ளார். இன்னொரு பக்கம் 'மாயா' பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் 'இரவாக்காலம்' படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.
ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தெலுங்கில் பிஸி நடிகராகி உள்ளார். தெலுங்கில் உருவாகவிருக்கும் 'போகன்' ரீமேக்கில் நடிக்கவும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கிறார்.
தெலுங்கிலும் லக்ஷ்மணே இயக்கும் இந்தப்படத்தில் அர்விந்த் சாமியின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே தற்போது எஸ்.ஜே.சூர்யா அழைக்கப்பட்டுள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது.