ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது கமலின் சபாஷ்நாயுடு, மேற்கு தொடர்ச்சி மலை, அம்மாயி, நாச்சியார், களத்தூர் கிராமம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா. அதோடு தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து அவ்வப்போது வெளிநாடுகளிலும் கச்சேரிகள் நடத்தி வரும் இளையராஜா, நவம்பர் 5-ந் தேதி ஐதராபாத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
மேலும், இதற்கு முன்பு ஐதராபாத்தில் நடத்திய இசை கச்சேரிகளில் தமிழ், தெலுங்கு உள்பட தனது இசையில் உருவான பல மொழிப்பாடல்களையும் பாடிய இளையராஜா, இந்த கச்சேரியில் தெலுங்கு பாடல்களை மட்டுமே பாடுகிறாராம். தான் மட்டுமின்றி தனது இசையில் தெலுங்கு பாடல்கள் பாடிய மற்ற பாடகர், பாடகிகளையும் அந்த நிகழ்ச்சியில் பாட வைக்கிறாராம் இளையராஜா.
அந்த வகையில், இளையராஜாவின் இசையில் தெலுங்கில் அதிகப்படியான ஹிட் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது 50 ஆண்டு திரையிசை பயணத்தை கொண்டாடும் வகையில், வெளிநாடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கச்சேரிகள் நடத்தி வந்தபோது, தனது இசையில் உருவான பாடல்களை மேடைகளில் பாட ராயல்டி கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார் இளையராஜா.
அதனால் அந்த விவகாரத்துக்குப் பிறகு இளையராஜா-எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் இதுவரை படங்களிலோ அல்லது கச்சேரிகளிலோ இணையவில்லை. ஆனால், இந்த ஐதராபாத் இசை நிகழ்ச்சியில் அவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.