ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
2014-ம் ஆண்டு ஆட்டோ நகர் சூர்யா என்ற தெலுங்கு படத்தில் தான் முதன்முதலாக நாகசைதன்யா - சமந்தா இணைந்து நடித்தனர். அந்த படத்தில் நடித்து வந்தபோதே அவர்களுக்கிடையே காதல் உருவானது. ஆனால் காதலை வெளியில் சொல்லாமல் மறைமுகமாக காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் காதலை பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்றபோது தயங்கினாராம் நாக சைதன்யா.
அதைப்பார்த்த சமந்தா, சில நாட்களை கெடுவாக வைத்து, அதற்குள்ளாக வீட்டில் காதலை சொல்ல வேண்டும். இல்லையென்றால் உங்கள் கையில் ராக்கி கயிறு கட்டி அண்ணனாக்கி விடுவேன் என்று நாகசைதன்யாவுக்கு அன்பான மிரட்டல் விட்டிருக்கிறார் சமந்தா. அதன்பிறகு தான், அவர் சொன்ன காலக் கெடுவிற்குள் தனது வீட்டில் காதலை சொல்லியிருக்கிறார் நாகசைதன்யா. இந்த தகவலை, தற்போது தான் நடித்துள்ள யுத்தம் சரணம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின்போது ஜாலியாக கூறியுள்ளார் நாகசைதன்யா.