இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
2014-ம் ஆண்டு ஆட்டோ நகர் சூர்யா என்ற தெலுங்கு படத்தில் தான் முதன்முதலாக நாகசைதன்யா - சமந்தா இணைந்து நடித்தனர். அந்த படத்தில் நடித்து வந்தபோதே அவர்களுக்கிடையே காதல் உருவானது. ஆனால் காதலை வெளியில் சொல்லாமல் மறைமுகமாக காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் காதலை பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்றபோது தயங்கினாராம் நாக சைதன்யா.
அதைப்பார்த்த சமந்தா, சில நாட்களை கெடுவாக வைத்து, அதற்குள்ளாக வீட்டில் காதலை சொல்ல வேண்டும். இல்லையென்றால் உங்கள் கையில் ராக்கி கயிறு கட்டி அண்ணனாக்கி விடுவேன் என்று நாகசைதன்யாவுக்கு அன்பான மிரட்டல் விட்டிருக்கிறார் சமந்தா. அதன்பிறகு தான், அவர் சொன்ன காலக் கெடுவிற்குள் தனது வீட்டில் காதலை சொல்லியிருக்கிறார் நாகசைதன்யா. இந்த தகவலை, தற்போது தான் நடித்துள்ள யுத்தம் சரணம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின்போது ஜாலியாக கூறியுள்ளார் நாகசைதன்யா.