ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கர்நாடகாவின் பிரபலமான பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். கவுரி லங்கேஷின் நெருங்கிய நண்பரும், நடிகருமான பிரகாஷ்ராஜ் நேற்று கவுரி லங்கேஷ் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த படுகொலை குறித்து பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கவுரி லங்கேஷ், என் 30 ஆண்டுகால நண்பர். லங்கேஷ் என்னைப் பொறுத்தவரையில் ஒரு ஹீரோ. அவரின் விதைகள் நாங்கள். இப்போதைய சிந்தனையாளர்களைக் காட்டிலும் அதிகம் சிந்தித்து, பேசி, எழுதியவர் லங்கேஷ். ஆனால், அப்போது சமுதாயத்தில் பிறரின் சிந்தனைகளை மதிக்கும் பக்குவம் இருந்தது. இப்போது அந்தப் பக்குவம் எங்கே போனது என்று தெரியவில்லை. கவுரி லங்கேஷை கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் வேலை. அதை அரசியலாக்குவதில் அர்த்தமில்லை. ஆனால், இங்கே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேள்வி எழுப்புபவர்களின் குரல்கள் நசுக்கப்படுகின்றன.
அடக்குமுறை நிகழ்த்தப்படுகிறது. இந்த நாட்டில் மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறார்கள்.
ஒருவருக்கு தன் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால், அந்தக் கருத்து மேலெழக் கூடாது என்று அடிக்கிறார்கள். இப்படிப்பட்ட படுகொலை மூலம் மவுனமாகிவிடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் இப்போது கவுரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகியிருக்கிறது. இந்த சத்தம் இன்னும் அதிகரிக்கும். துப்பாக்கி குண்டுகளால், மிரட்டலால், கொலையால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது.
ஒரு பெண் என்றும் பாராமல் இப்படி ஒரு கொலையைச் செய்திருக்கிறார்கள். இங்கே பயம் என்பது தேசிய நோய் ஆகிவிட்டது. உண்மையைப் பேசினால் வாழ முடியாது என்ற நிலை வந்துவிட்டது. இது எதிர்ப்பு அரசியலை, மாற்று சிந்தனையை, இன்னொரு குரலைக் கொல்லும் முயற்சி. கோழைகளுக்கு நடுவில் வாழ்வது போல் இருக்கிறது என்றார் பிரகாஷ்ராஜ்.