தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
"பெப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களையும் வைத்து வேலை செய்வோம்" என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததை தொடர்ந்து பெப்சி அமைப்பு கடந்த 1ந் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. தற்போது இரு தரப்புக்கும் சமாதான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் வேலை நிறுத்தம் வாபஸாகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையி விஷால் அளித்த பேட்டி வருமாறு:
பெப்சி தொழிலாளர்கள் மட்டுமல்லாது தேவைப்படும் பிற தொழிலாளர்களோடும் வேலை செய்வோம் என்கிற நிலைப்பாட்டில் நாங்கள் மாறுபடவில்லை. என்றாலும் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறோம். பெப்சியும் சில விஷயங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் எல்லா பிரச்னையும் தீர்க்கப்பட்டு விடும்.
பெரிய பட்ஜெட் படங்கள் பெப்சி தொழிலாளர்களை வைத்து தான் வேலை செய்யும். ஆனால் சிறு பட்ஜெட் படங்கள் அவர்களை வைத்து மட்டும் வேலை செய்ய முடியாது. ஒரு கோடியில் படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்களிடம் கட்டாயம் இத்தனை லைட்மேன்கள் வைத்து கொள்ள வேண்டும், வேலை இருந்தாலுல் இல்லாவிட்டாலும் மேக்அப் மேன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாது. பெப்சி தொழிலாளர்களால் இனி எந்த ஒரு படப்பிடிப்பும் தடைபடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். பெப்சி தொழிலாளர்களால் சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம்.
கேளிக்கை வரி விதிப்பு குறித்து தமிழக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை. அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். திருட்டு விசிடி ஒழிப்புக்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அது முடிந்தவுடன் வெளிப்படையாக தெரிவிப்போம். நடிகர் சங்க கட்டட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் முடிந்து விடும் என்றார் விஷால்.