'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சூர்யாவை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடித்த படம் 'மகளிர் மட்டும்'. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி 'குற்றம் கடிதல்' பட இயக்குநர் பிரம்மா இயக்கியிருக்கும் இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது.
'மகளிர் மட்டும்' படத்தில் சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை வித்தியாசமாக விளம்பரப்படுத்தும் எண்ணத்தில் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம். அதாவது ஆண்களை தியேட்டருக்கு வர வைக்கும் உத்தியாக, 'ஆண்களுக்கு மட்டும்' என்ற விதிமுறையோடு இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
''நீங்கள் கொண்டாடும் பெண்மணியைப் பற்றி அவர்களை நீங்கள் ஏன் கொண்டாடுகிறீர்கள் என்ற நான்கு வரிகளும், அந்தப் பெண்ணுடனான உங்கள் செல்பியையும் அனுப்புங்கள்! அவர் உங்கள் அம்மாவாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ, மகளாகவோ, மனைவியாகவோ, காதலியாகவோ அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். உங்களுடன் சேர்ந்து அந்த பெண்மணியை நாங்களும் கொண்டாடுகிறோம், ஒரு பட்டுப்புடவையுடன்...'' என விளம்பரம் செய்துள்ளனர்.
இந்த போட்டி அறிவிப்பு ஆண்கள் மத்தியில் 'மகளிர் மட்டும்' படத்துக்கு வரவேற்பை அதிகரிக்க செய்யும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.