தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபகாலமாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் கமல்ஹாசன். கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்றதோடு, விரைவில் நேரடி அரசியலுக்கு வருவேன் என்பது போன்று தெரிவித்தார். இதனால் பலரும் கமல்ஹாசனை சந்தித்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை நக்மா, கமலை சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தார். நேற்று எஸ்.வி.சேகர் கமலை அவரது ஆழ்வார் பேட்டை இல்லத்தில் சந்தித்து அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறியதாவது:
கமல் எனக்கு 40 ஆண்டுகால நண்பர். அவர் போன்ற நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவது நல்லது. வருமான வரியை முறையாக கட்டும் கமல், அரசியலுக்கும் வரவேண்டும் என்று விரும்புகிறேன். எல்லாவற்றையும் விமர்சிக்கும் கம்யூனிஸ்டுகளைப் போல் இல்லாமல் சரியாக விமர்சிக்கும் கமல் போன்றவர்களின் விமர்சனம் சரியானது. மேலும் இப்போது வரை பாஜகவை விமர்சிக்கவில்லை. அதோடு தூய்மை இந்தியா, பண மதிப்பு நீக்கம் போன்றவற்றை கமல் ஆதரித்தவர்.
நீட் இன்னும் பலருக்கு புரியாத விஷயமாக இருக்கிறது. கல்வி கொடுக்க வேண்டிய அரசு, மது விற்கிறது. மது விற்க வேண்டியவர்கள் கல்விக்கூடம் நடத்துகிறார்கள். இவை அனைத்திற்கும் அரசின் ஸ்திரமற்ற தன்மைதான் காரணம் என்றார் எஸ்.வி.சேகர்.