ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் ஆக்ஷ்ன் ஹீரோ என பெயரெடுத்தவர் நடிகர் சன்னி தியோல். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸியாகியிருக்கும் இவர், இப்போது "போஸ்டர் பாய்ஸ்" என்ற காமெடி படத்தின் மூலம் களமிறங்குகிறார். இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த சன்னி தியோல், நம்மோடு படம் பற்றி பகிர்ந்து கொண்டதாவது...
போஸ்டர் பாய்ஸ் படத்தில் நடிக்க என்ன காரணம்?
பொதுவாக நல்ல படங்களை விரும்பி வரவேற்பவன் நான். இந்த கதையை கேட்டதும் ஸ்ரேயாஸை சந்தித்து மேற்கொண்டு கதையை கேட்டேன். கதையும், அவர் சொன்ன விதமும் பிடித்திருந்தது. நடிக்க சம்மதம் சொன்னேன். அடுத்ததாக இப்படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி வந்தபோது ஸ்ரேயாஸையே இயக்க சொல்லிவிட்டேன்.
போஸ்டர் பாய்ஸ், மராத்தி படத்தின் ரீ-மேக்கா?
ஆமாம். ஆனால் நான் மராத்தி, போஸ்டர் பாய்ஸ் படத்தை பார்க்கவில்லை. ஒருவேளை நான் ஒரிஜினல் படத்தை பார்க்க விரும்பினால் அதைப்போன்றே நடிக்க தோன்றும். ஆகையால் படத்தை பார்க்காமல் என்னுடைய சொந்த ஸ்டைலில் நடித்திருக்கிறேன். படம் வரும்போது இரண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும்.
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க?
ஜாக்குவார் சவுத்ரி எனும் ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரியாக நடிக்கிறேன். பொதுவாக நான் எளிதில் கோபப்பட மாட்டேன். ஆனால் கோபம் வந்துவிட்டால் பின்னர் கட்டுப்படுத்துவது கடினம். எனக்கென்று ஒரு குடும்பம், குடும்பத்தில் நான் தான் தலைவர். ஒரு சின்ன போஸ்டரால் என்னுள்ளும், என் குடும்பத்திற்குள்ளும் என்னமாதிரியான மாற்றம் நிகழ்கிறது என்பது தான் கதை.
நீங்க ஆக்ஷ்ன் ஹீரோ, எப்படி காமெடி படம் உங்களுக்கு செட்டாச்சு?
பொதுவாக காமெடி செய்வது சிரமம் தான். ஆனால் நடிகன் என்று வந்துவிட்டால் எந்த மாதிரியான ரோலிலும் நடிக்க வேண்டும். படத்தில் டபுள் மீனிங் காமெடிகள் கிடையாது, யதார்த்த காமெடி தான் இருக்கும். ஆகையால் காமெடி ரோலில் நடித்தது சுலபமாக இருந்தது. ஒரு படத்தில் கேரக்டரின் தன்மையை உணர்ந்து கொண்டாலே போதும், அது ஆக்ஷ்னாக இருந்தாலும் சரி, காமெடியாக இருந்தாலும் சரி சுலபமாக நடித்துவிடலாம்.
நீங்க ஷாட் டெம்பர், அதனால் புதிய இயக்குநர்கள் உங்களிடம் கதை சொல்ல தயங்குவதாக ஒரு பேச்சு நிலவுகிறது. இதுப்பற்றி உங்கள் கருத்து?
என்ன சொல்ல... (சிரிக்கிறார்) படத்தில் வருவது மாதிரியே நான் நிஜத்தில் இருப்பது கிடையாது. மக்கள் என்னை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். என்னுடைய சினிமா வாழ்க்கையை எடுத்து கொண்டால், நான் நடித்த பல படங்கள் புதிய இயக்குநர்களின் படங்களாக தான் இருக்கும். யாஸ் சோப்ரா தவிர்த்து வேறு எந்த பெரிய இயக்குநர்களின் படங்களில் நான் பணியாற்றியது கிடையாது. என்னை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். நிஜ வாழ்க்கையில், நான் கோபக்காரனோ அல்லது ஷாட் டெம்பரோ கிடையாது.
சிங்கம்-3யில் நடிக்கிறீர்களா?
இன்னும் எதுவும் முடிவாகவில்லை. நான், சிங்கம் 3 படத்தை பார்த்தேன், படத்தில் எந்தமாதிரியான காட்சிகள் வந்துள்ளன என்று பார்த்து தெரிந்து கொண்டேன். சிங்கம் 3 மாதிரியான படங்களில் ஏற்கனவே நான் நடித்திருக்கிறேன். தற்போது கதை தொடர்பான பணிகள் நடக்கிறது. அதுவரை நான் எதுவும் உறுதியாக கூற முடியாது.