மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கொலவெறிடி பாடல் ஹிட் ஆனதைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார் நடிகர் தனுஷ். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 3 படத்தில் இடம்பெறும் கொலவெறிடி பாடலை, படத்தின் நாயகன் தனுஷ் எழுதி, பாடியிருக்கிறார். இந்த பாடல் உலகம் முழுவதும் செம ஹிட் ஆகியிருக்கிறது. பிரதமரே அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு தனுஷின் புகழ் கொலவெறிடி பாடலால் ஓங்கியிருக்கிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் கொலவெறிடி பாடல் ஹிட் ஆனதையொட்டி, உத்தரபிரதேச மாநிலம், பனாரஸில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டுள்ளார். இதுபற்றி தனுஷ் அளித்துள்ள பேட்டியில், காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள நகரை ரொம்ப விரும்புகிறேன். அமைதி, அழகு போன்றவற்றின் சொர்க்கமாக அது விளங்குகிறது. எனவே மீண்டும் அங்கு செல்வேன், என்று கூறியுள்ளார்.