தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பில்லா பாண்டி படப்பிடிப்பை பெப்சி தொழிலாளர்கள் நிறுத்தியதால் கோபம் அடைந்த தயாரிப்பாளர் சங்கம் "இனி தயாரிப்பாளர்கள் யாருடனும் இணைந்து பணியாற்றலாம்" என்று அறிவித்தது. அதன் பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமா பணிகளுக்கு புதிய பணியாளர்களை தேர்வு செய்ய விளம்பரம் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெப்சி கடந்த 1ந் தேதி முதல் வேலை நிறுத்தம் அறிவித்தது. நேற்று வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இரு சங்கங்களுக்கும் நேற்று முன்தினம் இரவு சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. இதில் பெப்சி தொழிலாளர்களை கொண்டு மட்டும் வேலை செய்வதற்கு ஒத்துக் கொண்ட தயாரிப்பாளர் சங்கம் பெப்சிக்கு புதிய நிபந்தனை ஒன்றை விதித்தது. நாங்கள் பெப்சி தொழிலாளர்களை கொண்டு மட்டும் வேலை செய்யும்போது, பெப்சி தொழிலளார்கள் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று கூறியது. இதனை ஏற்றுக் கொண்ட பெப்சி நிர்வாகிகள் இதனை எங்கள் பொதுக்குழுவை கூட்டி அவர்களின் கருத்தையும் கேட்டு முடிவு செய்கிறோம் என்று கூறிவிட்டு வந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது: பெப்சி தொழிலளார்கள் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களின் படங்களில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கை நியாமானது. இதனை நாங்கள் நிர்வாகிகள் ஒப்புக் கொண்டாலும், சங்க விதிகளின்படி பொதுக்குழுவில் நிறைவேற்றித்தான் ஒப்பந்தம் செய்ய முடியும். அதற்கான பணியை இப்போது துவங்கி உள்ளோம். இன்னும் ஓரிரு நாளில் அனைத்து பிரச்னைகளும் முடிந்து விடும். என்றார்.
இருதரப்பும் நிபந்தனைகளை ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டு விட்டால் இனி தயாரிப்பாளர் கில்டு, பிலிம் சேம்பர் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக பதிவு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற மாட்டார்கள். எனவே இந்த சங்கங்களில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறையும். சங்கங்கள் பலவீனப்படும். என்கிறார்கள்.