பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
மகேஷ்பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், இந்த படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குவது உறுதியாகி விட்டது. அந்த வகையில், 2018ல் விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் முருகதாஸ், 2019ம் ஆண்டு பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறாராம். அந்த படமும் பாகுபலி-2 விற்கு இணையாக பல மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறதாம்.
மேலும், பாகுபலி-2 படத்தில் நடித்து முடித்ததும் பிரபாஸை வைத்து தெலுங்கில் உள்ள சில பிரபல டைரக்டர்கள் படமெடுக்க முன்வந்தபோது, அந்த படங்களை நிராகாரித்து விட்ட பிரபாஸ், வளர்ந்து வரும் இயக்குனரான சுஜித் இயக்கும் சாஹோ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதேபோல் இந்த சாஹோ படத்தைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ராதாகிருஷ்ணன் என்ற ஒரு புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்கிறாராம் பிரபாஸ். இப்படி பிரபல இயக்குனர்கள் பலரும் பிரபாஸை வைத்து படம் இயக்க ஆர்வத்தில் இருக்கும் நிலையில் அவர் ஒரு புதுமுக இயக்குனரின் கதையை ஓகே செய்திருப்பது தெலுங்கு பட உலகினருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.