மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப், கடந்த 2 மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப் பலமுறை ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தும், அவருக்கு ஜாமின் தர கோர்ட் மறுத்து விட்டது.
தொடர்ந்து நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், திலீப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் தான் முக்கிய குற்றவாளிகள் என நிரூபிக்கும் வகையிலான சாட்சிகள், ஆதாரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். இந்நிலையில், தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கேட்டு திலீப், சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார்.
திலீப்பின் கோரிக்கையை ஏற்ற சிறை அதிகாரிகள் அவரை பரோலில் வெளியே விட அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து, இன்று (செப்.,6) 2 மணிநேரம் பரோலில், திலீப் சிறையில் இருந்து வெளியே வந்தார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர் தந்தையின் நினைவுநாள் காரியங்களில் கலந்துகொண்ட திலீப், அதன்பின் காலை உணவையும் அங்கேயே முடித்தார். சரியாக 9.45 மணியளவில் மீண்டும் போலீஸ் காவலுடன் ஆலுவா சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் திலீப்.. அவர் வந்து சென்ற இந்த இரண்டு மணி நேரத்தில் போன் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தக்கூடாது என்றும் உயர் அதிகாரியின் ஆலோசனையின்படி நடக்கவேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. திலீப்பும் அதன்படியே நடந்துகொண்டார்.