அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நடிகை விவகாரத்தில் கைதாகி கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். அவர் சம்பந்தப்பட்டது நடிகை விவகாரம் என்பதாலோ என்னவோ திரையுலகை சேர்ந்த யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று சந்திததாகவோ, ஆறுதல் கூறியதாகவோ தெரியவில்லை.. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் கூட சிறைக்கு சென்று அவராய் சந்திக்கவில்லை. இந்தநிலையில் சில தினகளுக்கு முன் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனும் திலீப்பின் மகள் மீனாட்சியும் அவரை சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்..
அதை தொடர்ந்து நடிகர் ஜெயராம் சிறையிலிருக்கும் திலீப்பை சந்தித்து ஓணம் வாழ்த்துக்களை கூறிவிட்டு பரிசளித்துவிட்டும் வந்துள்ளார். தடையை ஒருவர் உடைத்துவிட்டால், மற்றவர்களுக்கு அந்த பாதையில் செல்வது எளிது தானே. அந்தவகையில் மலையாள திரையுலக பிரபலங்களான இயக்குனர் ரஞ்சித்,, நடிகர்கள் ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சாஜன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளனர்.