டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை விவகாரத்தில் கைதாகி கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். அவர் சம்பந்தப்பட்டது நடிகை விவகாரம் என்பதாலோ என்னவோ திரையுலகை சேர்ந்த யாரும் இதுவரை அவரை சிறையில் சென்று சந்திததாகவோ, ஆறுதல் கூறியதாகவோ தெரியவில்லை.. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்கள் கூட சிறைக்கு சென்று அவராய் சந்திக்கவில்லை. இந்தநிலையில் சில தினகளுக்கு முன் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனும் திலீப்பின் மகள் மீனாட்சியும் அவரை சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்..
அதை தொடர்ந்து நடிகர் ஜெயராம் சிறையிலிருக்கும் திலீப்பை சந்தித்து ஓணம் வாழ்த்துக்களை கூறிவிட்டு பரிசளித்துவிட்டும் வந்துள்ளார். தடையை ஒருவர் உடைத்துவிட்டால், மற்றவர்களுக்கு அந்த பாதையில் செல்வது எளிது தானே. அந்தவகையில் மலையாள திரையுலக பிரபலங்களான இயக்குனர் ரஞ்சித்,, நடிகர்கள் ஹரிஸ்ரீ அசோகன், கலாபவன் சாஜன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட சிலர் திலீப்பை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளனர்.