டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவுக்கு வரும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். அதோடு, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
பெப்சி தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய பணியாளர்களை தயாரிப்பாளர் சங்கம் தேர்வு செய்து முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக விளம்பரமும் வெளியானது. இதனை கண்டித்து கடந்த 1ம் தேதி முதல் பெப்சி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. இதன்காரணமாக காலா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமும் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் உடன் பெப்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 4 மணி நேரம் பேச்சுவாத்தை நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்குள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என்றார்.
பின்னர் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், புதிய டெக்னிசியன்களுக்கான அரிய வாய்ப்பு என்ற விளம்பரத்தை திரும்ப பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எதிராக இன்று(செப்., 5) வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.