ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னணி நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள முன்னணி நடிகர் திலீப், கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு நடந்து வருகிறது. 3 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதனால் திலீப் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளிவரும் சூழ்நிலை இல்லாததால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை சிறையில் சந்தித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திலீபின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், திலீபின் மகள் மீனாட்சி ஆகியோர் திலீப்பை சிறையில் சந்தித்து பேசி விட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ஜெயராம் ஆலுவா சிறைக்கு வந்தார். அவர் மனு எழுதிக் கொடுத்து திலீபை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து ஜெயராம் கூறியதாவது: திலீப் எனது நெருங்கிய நண்பர். ஒவ்வொரு ஓணம் பண்டிகையின்போதும் அவரை சந்தித்து அவருக்கு புத்தாடை பரிசளிப்பது எனது வழக்கம். இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் அவரை சந்தித்து புத்தாடை பரிசளித்து வந்திருக்கிறேன். வழக்கு பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. கடவுள் அருளால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் அவர் மீண்டு வருவார். அவருக்காக பிரார்த்திக்கிறேன் என்றார் ஜெயராம்.