‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
முன்னணி நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள முன்னணி நடிகர் திலீப், கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு நடந்து வருகிறது. 3 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதனால் திலீப் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளிவரும் சூழ்நிலை இல்லாததால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை சிறையில் சந்தித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திலீபின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், திலீபின் மகள் மீனாட்சி ஆகியோர் திலீப்பை சிறையில் சந்தித்து பேசி விட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ஜெயராம் ஆலுவா சிறைக்கு வந்தார். அவர் மனு எழுதிக் கொடுத்து திலீபை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து ஜெயராம் கூறியதாவது: திலீப் எனது நெருங்கிய நண்பர். ஒவ்வொரு ஓணம் பண்டிகையின்போதும் அவரை சந்தித்து அவருக்கு புத்தாடை பரிசளிப்பது எனது வழக்கம். இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் அவரை சந்தித்து புத்தாடை பரிசளித்து வந்திருக்கிறேன். வழக்கு பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. கடவுள் அருளால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் அவர் மீண்டு வருவார். அவருக்காக பிரார்த்திக்கிறேன் என்றார் ஜெயராம்.