ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னணி நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள முன்னணி நடிகர் திலீப், கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு நடந்து வருகிறது. 3 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதனால் திலீப் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளிவரும் சூழ்நிலை இல்லாததால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை சிறையில் சந்தித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திலீபின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், திலீபின் மகள் மீனாட்சி ஆகியோர் திலீப்பை சிறையில் சந்தித்து பேசி விட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ஜெயராம் ஆலுவா சிறைக்கு வந்தார். அவர் மனு எழுதிக் கொடுத்து திலீபை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து ஜெயராம் கூறியதாவது: திலீப் எனது நெருங்கிய நண்பர். ஒவ்வொரு ஓணம் பண்டிகையின்போதும் அவரை சந்தித்து அவருக்கு புத்தாடை பரிசளிப்பது எனது வழக்கம். இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் அவரை சந்தித்து புத்தாடை பரிசளித்து வந்திருக்கிறேன். வழக்கு பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. கடவுள் அருளால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் அவர் மீண்டு வருவார். அவருக்காக பிரார்த்திக்கிறேன் என்றார் ஜெயராம்.