ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
முன்னணி நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள முன்னணி நடிகர் திலீப், கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு நடந்து வருகிறது. 3 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதனால் திலீப் இப்போதைக்கு சிறையில் இருந்து வெளிவரும் சூழ்நிலை இல்லாததால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை சிறையில் சந்தித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு திலீபின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன், திலீபின் மகள் மீனாட்சி ஆகியோர் திலீப்பை சிறையில் சந்தித்து பேசி விட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடிகர் ஜெயராம் ஆலுவா சிறைக்கு வந்தார். அவர் மனு எழுதிக் கொடுத்து திலீபை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.
இதுகுறித்து ஜெயராம் கூறியதாவது: திலீப் எனது நெருங்கிய நண்பர். ஒவ்வொரு ஓணம் பண்டிகையின்போதும் அவரை சந்தித்து அவருக்கு புத்தாடை பரிசளிப்பது எனது வழக்கம். இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் அவரை சந்தித்து புத்தாடை பரிசளித்து வந்திருக்கிறேன். வழக்கு பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. கடவுள் அருளால் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் அவர் மீண்டு வருவார். அவருக்காக பிரார்த்திக்கிறேன் என்றார் ஜெயராம்.