ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சைட்டோ பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் எஸ்.யசோதா தயாரிக்கும் படம் என்னோடு நீ இருந்தால். மு.ரா.சத்யா என்ற புதுமுகம் இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். மானசா நாயர் ஹீரோயின். இவர்கள் தவிர வெண்ணிற ஆடை மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக் பாண்டி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். நா.சரணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.கே இசை அமைத்திருக்கிறார் படம் பற்றி சத்யா கூறியதாவது:
ஹீரோ ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். அங்கு வரும் பணக்கார பெண்ணான பூஜாவை சந்திக்கிறார். அவர்களுக்குள் காதல் மலர்கிறது. திடீரென்று அவர் கானாமல் போகிறார். அவரை பல இடங்களிலும் தேடுகிறார். அப்போது அவருக்கு திகில் சம்பவங்கள் பல நிகழ்கிறது. அந்த திகில் சம்பவங்களைக் கடந்து பூஜாவை கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை. திகிலுடன் காதலையும் கலந்து சொல்லி இருக்கிறோம். விரைவில் படம் வெளியாக உள்ளது. என்றார் மு.ரா.சத்யா.