மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் பத்மாவதி படத்தில் இணைந்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இப்படமும் சரித்திர பின்னணியில் உருவாகி வருகிறது. ராணி பத்மாவதியாக தீபிகாவும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஷாகித் கபூர், ரசா முராத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதைப்படி ரசா முராத், ரன்வீர் சிங்கை கன்னத்தில் அறைய வேண்டும். இந்தக்காட்சி படமாக்கப்பட்டது. நடிப்பில் எப்போதும் துல்லியத்தை எதிர்பார்க்கும் சஞ்சய் லீலா பன்சாலிக்கு, எதிர்பார்த்தபடி டேக் சரியாக வரவில்லை. இதனால் ரன்வீர் கன்னத்தில் ரசாவை மீண்டும் மீண்டும் அறைய வைத்தார். இப்படியாக சுமார் 24 டேக் சென்றுள்ளது. கடைசியாக 25வது டேக்கில் தான் இயக்குநருக்கு திருப்தி ஏற்பட்டது. ஆனால் அதற்குள்ளாக ரன்வீரின் கன்னம் சிவந்து போய்விட்டது. இதை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் உண்மை கதை என வெளியிட்டிருக்கிறார் ரன்வீர் சிங்.