டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாகுபலி-2 படத்தில் நடித்த பிறகு சுதீஸ் இயக்கும் சாஹோ படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். நான்கு மொழிகளில் தயாராகும் இந்த படம் 150 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. மேலும், பாகுபலி-2விற்கு பிறகு பாலிவுட்டிலும் பிரபாஸின் மார்க்கெட் எகிறி நிற்பதால், சாஹோ படத்தில் இந்தி நடிகர்கள் பலரை நடிக்க வைத்து பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார்கள்.
அந்த வகையில், சாஹோ படத்தில் ஸ்ரத்தா கபூர், மந்திராபேடி, நீல்நிதின் முகேஷ் உள்பட பல இந்தி பிரபலங்களும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது மகேஷ்பாபு நடிப்பில் ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ள ஏ.ஆர்.முருகதாஸ், சமீபத்தில் பிரபாஸை சந்தித்திருக்கிறார். அந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றுள்ளது. அதையடுத்து சாஹோவைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்பது போன்ற பரபரப்பு செய்திகள் தெலுங்கு மீடியாக்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த யூகங்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ், பிரபாஸ் தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பு செய்திகளும் வெளியாகவில்லை. அதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்கி முடித்ததும் பிரபாஸ் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவார் என்று தெரிகிறது.