ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல சின்னத்திரை நடிகர் ராமச்சந்திரன். பல சீரியல்களில் வில்லனாக, குணசித்ர நடிகராக, காமெடியனாக நடித்து வரும் அவர், சின்னத்திரை நடிகர் கெளசிக் இயக்கிய பனிவிழும் நிலவு -என்ற படத்தில் ஒரு புரொபசர் வேடத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியிருக்கிறார்.
இதுகுறித்து ராமச்சந்திரன் கூறுகையில், சினிமாவில் பெரிய நடிகராக வேண்டும் என்றுதான் நான் நடிக்க வந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் சின்னத்திரைக்கு வந்தேன். அப்படி வந்து 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டேன். நிறைய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். விளைவு, இப்போது எந்தமாதிரியான கேரக்டர் என்றாலும் நடித்து ஸ்கோர் பண்ணக்கூடிய திறமையை வளர்த்துக்கொண்டுள்ளேன்.
தற்போது அடுத்த லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. சின்னத்திரை நடிகர்கள் பலரும் சினிமாவிலும் சாதித்து வருகிறார்கள். அதனால் நானும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சி எடுத்து வருகிறேன். கூடிய சீக்கிரமே நான் நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறும் ராமச்சந்திரன், சினிமாவில் பிசியாகி விட்டாலும், சீரியல்களில் நடிப்பதை விட மாட்டேன் என்கிறார்.