பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் தொடர்ந்து ஒளிபரப்பாகி சாதனை படைத்து வருகிறது சரவணன் மீனாட்சி தொடர். இந்த தொடரின் நாயகன், நாயகிகள் நிறைய மாறிவிட்டார்கள். ஆனால் தொடர்ந்து தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ஆயிரம் எபிசோட்களை கடந்தது சரவணன் மீனாட்சி. ஆனால் காதல் கதையாக தொடங்கி தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்த தொடர், இப்போது காலத்துக்கு ஏற்றமாதிரி தன்னையும் மாற்றிக் கொண்டு திகில் தொடராக மாறியிருக்கிறது.
கதைப்படி, சரவணன் குடும்பம் ஓட்டல் நடத்த விரும்புகிறது. இதற்காக ஒரு வீடு பிடித்து அதையே ஓட்டலாக மாற்றுகிறார்கள். அந்த வீட்டுக்குள் பேய் இருக்கிறது. அது மீனாட்சிக்குள் புகுந்து கொள்கிறது. இதனால் கோவிலுக்கு ஆர்வமா செல்லும் மீனாட்சி, இப்போது கோவில் என்றால் தவிர்த்து விடுகிறார். அந்த வீட்டுக்குள் இருக்கும் பேய் யார். அந்த பேய் ஏன் மீனாட்சிக்குள் வர வேண்டும். அடுத்து அது என்ன செய்யப்போகிறது என்பது அடுத்தடுத்த எபிசோட்களில் பரபரப்பு கிளப்ப இருக்கிறது.