பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சிறந்த படங்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த 191 படங்களில் இருந்து 8 படங்கள் தேர்வு செய்யப்பட்டு. அதனை 40 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து அந்த ஆய்வின் அடிப்படையில் விசாரணை, ஜோக்கர், அப்பா, உறியடி படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இந்த விருது வழங்கும் விழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது, சங்கத்தின் தலைவர் ச.தமிழ் செல்வன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். நடிகை ரோகினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜு முருகன், விசாரணை படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், அப்பா படத்தின் இயக்குனர் சமுத்திரகனி, உறியடி படத்தின் இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை பெற்றனர்.
"மிகச் சிறந்த படைப்புகள் வெளிவரும்போது அவற்றைத் தோளில் வைத்து கொண்டாடும் உரிமை எழுத்தாளர்கள் உண்டு. அதன் ஒரு பகுதி தான் இந்த விருதுகள். இந்தப் படைப்புகள் தான் நம் சொத்துகள். சிறு முதலீட்டில் படங்கள் வெளிவந்தாலும், நான்கு திரைப்படங்களும் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றன" என்றார் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன்.