'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மதுரை அருகே உள்ள மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதிகள், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். எனவே முதுமையில் வாடும் எங்களுக்கு அவர் மாதந்தோறும் பராமரிப்பு செலவு தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தனர். நீண்ட நாட்கள் நடந்த இந்த வழக்கில் தனுஷ், கஸ்தூரிராஜாவின் மகன் என்பதற்காக ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. தனுசும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதன் அடிப்படையில் மேலூர் தம்பதிகளின் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மேலூர் தம்பதிகள் மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர். அதில் தாங்கள் தொடர்ந்த வழக்கில் தனுஷ் தாக்கல் செய்த ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பள்ளி சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவவை என்றும், அவற்றின் அடிப்படையில் தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.