ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னணி மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில் வாக்குமூலத்தின் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டார். தற்போது பல்சர் சுனில் நடிகை கடத்தலில் திலீபின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கூறி வருகிறார். இந்த நிலையில் காவ்யா மாதவன் சிறையில் இருக்கும் கணவர் திலீப்பை சந்தித்து பேசினார்.
நேற்று முன்தினம் கொச்சி சிறையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது காவ்யாவின் தந்தை மாதவன், திலீப்பின் மகள் மீனாட்சி. திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது. இருவரும் முதல் 5 நிமிடங்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல் அழுதபடியே இருந்ததாவும், மகள் மீனாட்சியை கட்டிப்பிடித்து திலீப் கதறியதாகவும் பின்னர் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திலீப்பை சந்திக்க காவ்யா வந்த தகவல் கிடைத்து மீடியாக்கள் சிறை வாசலில் குவிந்தனர். ஆனால் காவ்யா மீடியாக்களை சந்திப்பதை தவிர்த்து வேகவேகமாக காரில் ஏறிச் சென்று விட்டார். இதற்கிடையில் தன் தந்தையின் நினைவு தின பிரார்த்தனையில் பங்கேற்க ஒரு நாள் அனுமதி தர வேண்டும் என்ற திலீப், அங்கமாலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் பிரார்த்தனையில் பங்கேற்க 2 மணி நேரம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.