ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதிநாளான நேற்று கமல் கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியிலிருந்து காஜல் வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இந்த நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது:
எல்லா கேள்விகளுக்கும் விடை உண்டு. இந்த கேள்விக்கு விடையே இல்லை என்று மனம் தளர்பவர்கள் அனிதாவைப்போல் தன்னையே மாய்த்துக்கொள்வார்கள். இந்த தலைக்குனிவு இனி நமக்கு நிகழக்கூடாது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஓலமிட்டு அழுதல் நமக்கு மனம் இருக்கிறது என்பதை காட்டுகிறது. ஆவண செய்வோம். இனி இது நிகழாமல் பார்ப்போம்.
இது நமது எல்லோரது வீட்டிலும் நடந்த சோகம். இருந்தாலும் அதை மறந்து இனி அதுபோன்ற சோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்கும் தருணம் இது. நீங்கள் யோசித்து சொல்லுங்கள் என்று என்னை கேட்காதீர்கள். நாம் யோசிப்போம். போராட வேண்டியது வந்தால் போராடுவோம். அது இன்றைக்கு, உடனே, இங்கே, இந்த மேடையில் நடக்காது. ஏனென்றால் அது எதிர்கால திட்டம். நாம் தீட்ட வேண்டிய திட்டம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.