டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புஜங்கள் புடைக்க நெருப்பாய் மிரட்டும் பார்வையில் 'பாகுபலி'யில் 'ரப் அண்ட் டப் லுக்'கில் நடித்து பட்டைய கிளப்பிய நடிகர் ராணா, தன் திரைப்பயணம் குறித்து மனம் திறந்து பேசியதில் இருந்து...
நான் ஆணையிட்டால் படம் பற்றி?
காரைக்குடியில் வாழ்ந்த ஜோஹிந்தர் என்பவரின் கதை. ஒரு சின்ன இடத்தில் இருந்து அவர் எப்படி பெரிய அரசியல்வாதி ஆகிறார். இதில் அவர் சந்திக்கும் பிரச்னைகளை கூறுவதே படம். காஜல் அகர்வால், ராதா என்ற ரோலில் என் மனைவியாக நடிக்கிறாங்க. எங்களுக்குள் இருக்கும் அன்பு, காதல் எல்லாமே படத்தில் நல்லா வந்திருக்கு.
அரசியல் படமா?
படத்தில் அரசியலும் உண்டு, சாதாரணமாக ஒருத்தர் எப்படி இருப்பார். அவரே அரசியலில் நுழைந்த பிறகு எப்படி மாறுகிறார் என்பதே கதை.
படத்தில் உங்கள் 'கெட்டப்'?
படத்தின் ஆரம்பத்தில் சாதாரண உடையில் வருவேன். அரசியலில் நுழைந்த பிறகு வேட்டி, சட்டையில் வருவேன். நான் இந்த படத்தில் தான் வேட்டி, சட்டையை பயன்படுத்துகிறேன். கழுத்து நிறைய நகைகளுடன் அரசியல்வாதி 'லுக்'குடன் பிரமாண்டமாக இருப்பேன். ரசிகர்கள் என்னை இந்த படத்தில் புது 'கெட் அப்'பில் பார்ப்பாங்க.
படத்திற்கு எம்.ஜி.ஆர். தலைப்பு ஏன்?
இந்த படத்தின் இயக்குனர் தேஜா எம்.ஜி.ஆர். ரசிகர். எம்.ஜி.ஆரை பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளார். அவர் பார்முலாவையும் ஆங்காங்கே படத்தில் சேர்த்துள்ளார். எம்.ஜி.ஆரின் காதல் பாடல்களில் ஒன்றான 'பச்சைக்கிளி' பாடலும் இந்த படத்தில் உண்டு.
சென்னை கூவத்துார் வசனங்கள்?
இது எனக்கு இரண்டாவது அனுபவம், நான் தெலுங்கில் 'லீடர்' படம் பண்ணும்போது இதேபோன்று அவர் கதை, இவர் கதை என்றெல்லாம் பேசினாங்க. இப்போது கூவத்துார் சம்பவம் வசனமாக வைக்கப்பட்டது பெரிதாக பேசப்படுகிறது.
காஜல் பற்றி?
கொஞ்சம் மெச்சூரிட்டி, வெகுளி கேரக்டருக்கு பொருத்தமா இருந்தாங்க, காஜலுக்கு இது 50வது படம்.
பாகுபலி அனுபவம்?
இந்திய படத்தை உலக அளவில் எடுத்து சென்ற படம் 'பாகுபலி'. அதில், நான் இருந்தேன் என்பது எனக்கு பெருமையான விஷயம். இயக்குனர் ராஜமவுலியோடு வேலை பார்த்தது மிகப் பெரிய அனுபவம்.
எந்த மொழிகளில் உங்களுக்கு போட்டிகள் அதிகம்?
நான் சினிமாவில் இருக்கணும். அது எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு புதுசு, புதுசா கதை பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது. அதனால் நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை.
சினிமா தவிர?
நான் எட்டு ஆண்டாக 'விஷுவல் எபெக்ட்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். 85 படங்கள் பண்ணியிருக்கோம். எனக்கு போட்டோகிராபி தெரியும். சில படங்கள் தயாரித்திருக்கிறேன். மொத்தத்தில் எனக்கு சினிமா தான் வாழ்க்கை.
-கவிதா