தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நயன்தாராவுடன் ஒரு படத்திலாவது டூயட் பாடி விட வேண்டும் என்ற ஜெயம்ரவியின் கனவு தனிஒருவன் படத்தில் நனவானது. அதையடுத்து இப்போது வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நனவாகியிருக்கிறது. இந்த படத்தில் நயன்தாராவுடன் தான் நடித்த அனுபவத்தை தனது நட்பு வட்டாரங்களில் பக்கம் பக்கமாக பேசி வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால் நயன்தாராவோ, எத்தனை பக்க டயலாக்கை கொடுத்தாலும் அதை பத்தே நிமிடத்தில் மனப்பாடம் செய்து கொண்டு நடித்து விடுகிறார் சிவகார்த்திகேயன் என்று அவரைப்பற்றி பெருமையாக ஒரு தொலைக் காட்சி பேட்டியில் தெரிவித்தார். மேலும், சிவகார்த்திகேயன், ரொம்ப கலகலப்பான நடிகர். அவர் ஸ்பாட்டில் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளுவும் தெரியாது. அந்த அளவுக்கு நடிப்புக்கு நடுவே அவ்வப்போது காமெடி செய்து கொண்டேயிருப்பார் என்கிறார் நயன்தாரா.