ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
3 வருடங்களுக்கு முன்பு தயாரான படம் புரியாத புதிர். விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருந்தனர். புதுமுக இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். நேற்று இந்தப் படம் வெளிவந்தது. இந்தப் படம் தற்போதுள்ள விஜய்சேதுபதியின் இமேஜுக்குரிய படம் அல்ல என்கிறார் இயக்குனர். அவர் மேலும் கூறியதாவது:
இயக்குனர் ராம் சாரிடம் உதவியாளராக பணி புரிந்தேன். 2009ல் வாட்ஸாப் வருவதற்கு முன்பே இந்த கதையை எழுதி விட்டேன். 60 நாட்களில் படத்தை முடித்து விட்டோம். ஆனாலும் பணம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தொழிலிலும் தாமதம் என்பது தவிர்க்க முடியாதது. விஜய் சேதுபதி பெரிய ஹீரோவாக ஆவதற்கு முன்பே ஆரம்பித்ததால் அவரின் இப்போதைய இமேஜுக்கு ஏற்ற மாதிரி படமாக கொடுக்க முடியவில்லை. இப்போது என்னிடம் இருக்கும் கதை விஜய் சேதுபதியின் மாஸ் இமேஜுக்கு ஏற்ற மாதிரி கதை. அவர் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவரின் இமேஜுக்கு ஏற்ற படமாக கொடுப்பேன். எனது அடுத்தடுத்த படங்களும் திரில்லர் படங்கள் தான். என்றார் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.
தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் கூறியதாவது: 2016-லேயே இந்த படத்தை பார்த்து விட்டு ரெபெல் ஸ்டுடியோவிடன் இருந்து வாங்கி பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் அப்போது வெளியாகவில்லை. இதற்கிடையில் விஜய்சேதுபதி படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகியதால் இப்போது ரிலீஸ் செய்திருக்கிறோம்.
எப்போதுமே கடைசி நேரத்தில் கணக்கு வழக்குகளை செட்டில் செய்வோம். ஆனால் எங்களிடம் எதுவும் சொல்லாமலேயே பெப்சி அமைப்பினர் கோர்ட்டுக்கு போய் விட்டார்கள். நேற்று இரவு தான் எல்லா பிரச்னைகளையும் பேசி முடித்தோம். அதன் பிறகு கிளியரன்ஸ் வாங்கி கொடுக்க கொஞ்சம் நேரம் ஆனதால் தான் ரிலீஸில் தாமதம் ஆகி, காலைக்காட்சி ரத்தானது.
நாம் தேவையில்லாத விஷயங்களை மொபைலில் இன்றும் பரப்பி வருகிறோம். அதை பற்றிய ஒரு விழிப்புணர்வு இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். புரியாத புதிர் 294 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. எங்களின் அடுத்த படங்களாக அண்டாவ காணோம், மம்மி, வா டீல் ஆகிய படங்களை சரியான தேதிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறோம். என்றார் தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார்.