ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை விவகாரம் பாலிவுட் வரை தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை கூறினார். அதுகூட அவராக வேண்டுமென்றே முன் வந்து கூறவில்லை. அவருடைய வாழ்க்கை பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு திலீப் விவாகரத்தை குறிப்பிட்டு பதிலளித்தார்.
நடிகை கங்கனாவுக்கும் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்குமான கீரி-பாம்பு சண்டை ஊரறிந்த ஒன்று. இருவரும் நெருங்கி பழகி வந்ததுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் ஒருமுறை கங்கனா தெரிவிக்க, அப்படியெல்லாம் எங்களுக்குள் எதுவுமில்லை என ஹ்ரித்திக் ஒரே போடாக போட அப்போது முதல் இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.
அந்த பேட்டியின்போது திலீப் விவாகரத்தை சுட்டிக்காட்டிய தொகுப்பாளர் உங்களுக்கு ஹ்ரித்திக்கிடம் இருந்து இப்படி ஏதும் அச்சுறுத்தல்கள் வரவில்லையா என்றார்..? அப்படி எதுவும் இல்லை என மறுத்த கங்கனா ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு பயம் தருகின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மலையாள நடிகை விஷயத்தில் நடிகர் திலீப் வேறொரு நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததை நடிகரின் மனைவியிடம் இவர் சொல்லிவிட்டார் என்பதால் அவரை பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கும் எல்லைவரை நடிகர் திலீப் சென்றுள்ளார். திருமணம் மீறிய பந்தம் தொடரும் பட்சத்தில் அங்கே இப்படி சில மோசமான நிகழ்வுகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது” எனவும் கூறியுள்ளார் கங்கனா..