இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள நடிகர் திலீப் மற்றும் நடிகை விவகாரம் பாலிவுட் வரை தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை கூறினார். அதுகூட அவராக வேண்டுமென்றே முன் வந்து கூறவில்லை. அவருடைய வாழ்க்கை பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு திலீப் விவாகரத்தை குறிப்பிட்டு பதிலளித்தார்.
நடிகை கங்கனாவுக்கும் நடிகர் ஹிரித்திக் ரோஷனுக்குமான கீரி-பாம்பு சண்டை ஊரறிந்த ஒன்று. இருவரும் நெருங்கி பழகி வந்ததுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் ஒருமுறை கங்கனா தெரிவிக்க, அப்படியெல்லாம் எங்களுக்குள் எதுவுமில்லை என ஹ்ரித்திக் ஒரே போடாக போட அப்போது முதல் இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர்.
அந்த பேட்டியின்போது திலீப் விவாகரத்தை சுட்டிக்காட்டிய தொகுப்பாளர் உங்களுக்கு ஹ்ரித்திக்கிடம் இருந்து இப்படி ஏதும் அச்சுறுத்தல்கள் வரவில்லையா என்றார்..? அப்படி எதுவும் இல்லை என மறுத்த கங்கனா ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கு பயம் தருகின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மலையாள நடிகை விஷயத்தில் நடிகர் திலீப் வேறொரு நடிகையுடன் தொடர்பு வைத்திருந்ததை நடிகரின் மனைவியிடம் இவர் சொல்லிவிட்டார் என்பதால் அவரை பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கும் எல்லைவரை நடிகர் திலீப் சென்றுள்ளார். திருமணம் மீறிய பந்தம் தொடரும் பட்சத்தில் அங்கே இப்படி சில மோசமான நிகழ்வுகள் நிகழ்வது தவிர்க்க முடியாதது” எனவும் கூறியுள்ளார் கங்கனா..