‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
1989-ம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் ராணிகஞ்ஜ் பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் நடந்த விபத்தில், சுரங்கத்தில் சிக்கி கொண்ட 64 தொழிலாளர்களை தன்னுடைய முயற்சியால் காப்பாற்றினார் இன்ஜினியரான ஜஸ்வந்த் சிங் கில். இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் படம் உருவாக உள்ளது.
இதில் ஜஸ்வந்த் சிங் வேடத்தில் முதலில் அக்ஷ்ய் குமாரிடம் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. அவர் மறுக்க அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அஜய், இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறியதாவது... "பூமிக்கடியில் சுமார் 160 மீட்டர் ஆழத்தில் 67 பேர் மாட்டிக் கொண்டவர்களை, ஜஸ்வந்த் காப்பாற்றினார். இது ஒரு திரில்லரான அனுபவம். இதில் நடிக்க ஆர்வமாய் உள்ளேன். சுரங்கம் போன்று செட் அமைத்து படப்பிடிப்பு நடத்துவது சற்று சிரமமான ஒன்று. ஆகையால் நிஜமான சுரங்கத்தில் படப்பிடிப்பை நடத்த எண்ணியுள்ளோம்" என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை டினு சுரேஷ் தேசாய் இயக்க உள்ளார். அபினவ் சுக்லாவுடன் இணைந்து அஜய் தேவ்கனும் தயாரிக்க உள்ளார்.